படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி பெருசா எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இந்த படத்துமேல இல்ல. அதாலதான் படம் ரிலீஸ் ஆகி நாலு நாள் ஆனாலும் கண்டுக்காம இருந்துட்டேன்.(தியேட்டருக்கு போய் படம் பாக்கணுமான்னு நெனச்ச என்னோட சோம்பேறித்தனமும் இதுக்கு ஒரு காரணம்னாலும் அதப்பத்தி இங்க பேசப்படாது. ) கடைசியா வீட்டுல வெட்டியா இருக்கறது தாங்க முடியாம 80 ரூபாய் டிக்கெட்ட 105 ரூபாய்க்கு வாங்கி பாத்துரலாம்னு முடிவு பண்ணுனேன்.( அய்யயோ.. ப்ளாக் டிக்கெட் இல்லைங்க.. இது ஆன்லைன் டிக்கெட் !)
சரின்னு மத்தியானம் பெய்ஞ்ச மழையையும் பொருட்படுத்தாம அதால விவசாயம் பண்ண நல்லா உழுது போட்ட மாதிரி இருக்கற ரோட்டையும் சமாளிச்சு ஒருவழியா தியேட்டருக்கு போய் சேந்துட்டேன்.( 105 ரூபா டிக்கெட் ஆச்சே !) படம் ஆரம்பிச்சதுல இருந்து மனுசுக்குள்ள ஒரே ஒரு உறுத்தல். இந்த இங்கிலீஷ்ல Déjà vu ன்னு சொல்லுவாங்க தெரியுமா ? அதாங்க.. எதை பாத்தாலும் இதை எங்கயோ ஏற்கனவே பாத்த மாதிரி இருக்கேன்னு சில சமயம் தோணுமே, அதேதான். இதுதான் எனக்கு படம் முழுக்க தோனுச்சு.
மேலும் படிக்க
செம்ம டா....படத்த யாராவது தார் தாரா கிழிச்சா நல்லாஇருக்கும்னு நென்ச்சேன்! செய்துட்ட..!
ஆனா நீ கஞ்சா கருப்போட கேவலமான comedya உன்னும் மோசமா திட்டியிருக்கலாம்! ;)